தொட்டியம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த வாலிபர் சாவு
- மதுவில் விஷம் கலந்து குடித்த வாலிபர் பலியானார்
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தொட்டியம் :
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நத்தம் ஊராட்சி வேந்தன்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பழனியாண்டி (வயது 55) இவருக்கு மனைவி, மகன்கள் பாஸ்கர், பரமசிவம் (26) மற்றும் வளர்மதி என்ற மகளும் உள்ளனர். பாஸ்கரன் மற்றும் வளர்மதிக்கு திருமணமாகிவிட்டது. பரமசிவத்திற்கு இன்னும் திருமணமாகவில்லை. மேலும் இவருக்கு மது குடி பழக்கம் இருந்து வந்தது. சம்பவதன்று ஏழூர்பட்டியில் இருந்து மது வாங்கி வந்து அதில் வயலுக்கு அடிக்கும் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்துவிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தொட்டியம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்பு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் பரமசிவம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இருந்தார். இது குறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் பரமசிவத்தின் தந்தை பழனியாண்டி கொடுத்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.