உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதி வாலிபர் பலி

Published On 2022-10-18 09:35 GMT   |   Update On 2022-10-18 09:35 GMT
  • இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதி வாலிபர் பலியானார்
  • மெடிக்கல் கடையில் பணிபுரிந்து வந்தார்.

திருச்சி

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வெள்ளனூர் வடக்கு தெருவை சார்ந்த கல்யாண குமார் மகன் சரண் (வயது 22 ). இவர் அரியலூரில் உள்ள தனியார் மெடிக்கல் கடையில் பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் அரியலூரில் இருந்து சொந்த கிராமமான வெள்ளனுருக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது புள்ளம்பாடி சங்கேந்தி பிரிவு பாதை அருகே சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News