உள்ளூர் செய்திகள்

போட்டோ ஸ்டுடியோ பூட்டை உடைத்து ரூ.8.50 லட்சம் கொள்ளை

Published On 2022-11-15 15:36 IST   |   Update On 2022-11-15 15:36:00 IST
  • போட்டோ ஸ்டுடியோ பூட்டை உடைத்து ரூ.8.50 லட்சம் கொள்ளை நடந்துள்ளது.
  • பணத்தையும் அள்ளிச்சென்ற மர்ம நபர்கள்

திருச்சி:

மணப்பாறையில் போட்டோ கடையின் பூட்டை உடைத்து 8.50 லட்சம் மதிப்பிலான கேமரா கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளை

திருச்சி மாவட்டம், மனப்பாறையை அடுத்த பழைய காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 25). இவர் திருச்சி சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே நவீன வசதிகளுடன் கூடிய கேமராவுடன் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் கண்ணாடி கதவில் இருந்த பூட்டும் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது ரூ.8.40 லட்சம் மதிப்பிலான கேமராக்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து கொள்ளை பற்றிய தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. பிரதான சாலையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளை சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட நடவடிக்ைக எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை 

Tags:    

Similar News