உள்ளூர் செய்திகள்

பொறியியல் பணி காரணமாக திருச்சியில் 3 நாட்களுக்கு 7 ரெயில்கள் ரத்து

Published On 2023-01-28 15:09 IST   |   Update On 2023-01-28 15:09:00 IST
  • தண்டவாளத்தில் பொறியியல் பணி காரணமாக திருச்சியில் 3 நாட்களுக்கு 7 ரெயில்கள் ரத்து செய்யபட உள்ளன
  • இதற்கான அறிவிப்பை தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ளது.

திருச்சி:

சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் தண்டவாள பகுதியில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற 14, 21, 28 ஆகிய தேதிகளில் கீழ்காணும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. கரூர்- திருச்சி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு மார்க்கத்திலும் மேற்கண்ட 3 நாட்களுக்கு முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. சேலம்- விருதாச்சலம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு மார்க்கத்திலும் மேற்கண்ட 3 நாட்களுக்கு முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காட்டில் இருந்து காலை புறப்பட்டு திருச்சி வரை வரும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் மேற்கண்ட நாட்களில் கரூர்-திருச்சி வரை ரத்து செய்யப்படுகிறது. இதே போல மறு மார்க்கத்தில் மதியம் 1 மணிக்கு புறப்படும் ரெயில் திருச்சி- கரூர் வரை மேற்கண்ட நாட்களில் ரத்து செய்யப்படுகிறது. திருச்சியில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரை செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் மேற்கண்ட நாட்களில் திருச்சியில் இருந்து கரூர் வரை ரத்து செய்ய ப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News