உள்ளூர் செய்திகள்

திருச்சியில் 6 கிலோ குட்கா பறிமுதல்

Published On 2023-08-24 08:20 GMT   |   Update On 2023-08-24 08:20 GMT
  • திருச்சி சோமரசம்பேட்டையில் 6 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
  • சரவணபுரத்தில் உள்ள ஒரு மளிகை கடைகாரர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

ராம்ஜிநகர்,

திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோமரசம்பேட்டை, அல்லித்துறை, அதவத்தூர், நாச்சி குறிச்சி, தாயனூர் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டி கடைகளில் சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை ஈடுபட்டனர். அப்போது அல்லித்துறை அருகே உள்ள சரவணபுரத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் சுமார் 6 கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்து. அல்லித்துறை, சரவணபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் பாபு (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News