உள்ளூர் செய்திகள்

பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருடிய 2 பேர் கைது

Published On 2022-06-28 09:15 GMT   |   Update On 2022-06-28 09:15 GMT
  • பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • நகையை திருடிவிட்டு தப்பி சென்றனர்

திருச்சி:

திருச்சி உறையூர் பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 29). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேைல பார்த்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாயாரை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

வீட்டில் இருந்த அவரின் சகோதரி முன்பக்க கதவை திறந்து வைத்துக் கொண்டு சமையலறையில் பணியில் இருந்துள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் நைசாக வீடு புகுந்து பீரோவில் இருந்த இரண்டு பவுன் நகையை திருடிவிட்டு தப்பி சென்றனர். சமையல் அறையில் இருந்த கிருஷ்ணனின் சகோதரி இதனை கவனிக்கவில்லை.

வீடு திரும்பிய கிருஷ்ணன் நகை திருடு போனது குறித்த அறிந்த அவர், இதுபற்றி உறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வீடு புகுந்து நகை திருடிய திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்த தர்மராஜ் (21), விக்ரம் (19) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர்.

மேலும் அவர்களுக்கு வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதாக என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. 

Tags:    

Similar News