உள்ளூர் செய்திகள்
ஸ்டீம் பாத் எடுத்த பெண்ணின் 10 பவுன் நகைகள் மாயம்
- உடற்பயிற்சி கூடத்தில் ஸ்டீம் பாத் எடுத்த பெண்ணின் 10 பவுன் நகைகள் மாயமானது
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
உறையூர் மருதாண்டகுறிச்சி குழுமணி மெயின் ரோடு மங்கள நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி ரமா ரேவதி (வயது 35). இவர் திருச்சி தில்லை நகரில் உள்ள பெண்கள் பிட்னஸ் மையத்தில் ஸ்டீம் பாத் எடுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அவரது நகைகள் செயின் வளையல் மோதிரம் உள்ளிட்ட 10 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை தனது கைப்பையில் வைத்திருந்தார். ஸ்டீம் பாத் எடுத்து முடித்து விட்டு வந்து பார்த்தபோது கைப்பையில் இருந்த நகைகளையும், பணத்தையும் காணவில்லை. உடனே இதுகுறித்து தில்லை நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.