உள்ளூர் செய்திகள்

உயிரிழந்த காவலர்களுக்கு போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் மரியாதை செலுத்தியதை படத்தில் காணலாம்.

பாளை நினைவு ஸ்தூபியில் பணியின்போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி- 48 குண்டுகள் முழங்க மரியாதை

Published On 2022-10-21 09:34 GMT   |   Update On 2022-10-21 09:34 GMT
  • ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி நீர்த்தார் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • பாளையில் உள்ள நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நெல்லை:

பணியின்போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி நீர்த்தார் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த 3 காவலர்கள் உள்பட நாடு முழுவதும் பணியின்போது உயிரிழந்த 261 போலீசாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாளையில் உள்ள நினைவு ஸ்தூபியில் நெல்லைமாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து 48 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் சரவண குமார், சீனிவாசன், இன்ஸ் பெக்டர்கள், சப்-இன்ஸ் பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News