உள்ளூர் செய்திகள்
சூரங்குடி முதல் எட்டயபுரம் வரை மரம் நடும் திட்டம் - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு
- விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி முதல் எட்டயபுரம் வரை சாலைகளின் இரு புறமும் மொத்தம் 34 கிலோமீட்டர் தூரம் மரங்கள் நடப்படுகிறது.
- மரங்களுக்கு அமைக்கப்படும் கம்பி வேலியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி முதல் எட்டயபுரம் வரை சாலைகளின் இரு புறமும் மொத்தம் 34 கிலோமீட்டர் தூரம் மரங்கள் நடப்படுகிறது. முதற்கட்டமாக பிள்ளையார்நத்தம் முதல் சாலைகளின் இரு புறங்களிலும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நாளை முதல் கட்டமாக 4 கிலோமீட்டர் தூரம் நடப்படும். இதையொட்டி மரங்களுக்கு அமைக்கப்படும் கம்பி வேலியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் மரங்கள் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராகவன், மரங்கள் மக்கள் இயக்கம் அமல்ராஜ், முருகன், சென்னை குமார், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.