கைதான சேகர்.
பிளஸ்-2 படித்துவிட்டு 20 ஆண்டாக சிகிச்சை:கைதான போலி டாக்டர் சேலம் சிறையில் அடைப்பு
- பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக, ஓமலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் நாகபுஷ்பராணிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
- சேகர் சிகிச்சை அளிக்க வைத்திருந்த உபகரணங்கள் மற்றும் ஊசி, மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கே.ஆர். தோப்பூர் பகுதியில் பிளஸ்-2 படித்த ஒருவர், கடந்த 20 ஆண்டுகளாக, சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக, ஓமலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் நாகபுஷ்பராணிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை உதவி மருத்துவர் குணவதி மற்றும் மருந்தாளுனர் ஆகியோர் கே.ஆர்.தோப்பூர் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சேகர்(வயது 55) என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து கொண்டிருந்தார். இது தொடர்பாக அவரிடம் மருத்துவர் குணவதி விசாரணை நடத்தினார். அப்போது சேகர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு, கடந்த 20 ஆண்டாக நோயாளிகளுக்கு ஊசி போட்டு, மருத்து, மாத்திரைகள் வழங்கியது தெரிய வந்தது.
இதையடுத்து, சேகர் சிகிச்சை அளிக்க வைத்திருந்த உபகரணங்கள் மற்றும் ஊசி, மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மருத்துவர் கணவதி கொடுத்த புகாரின்பேரில், போலி மருத்துவர் சேகரை கைது செய்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்த னர். இந்த சம்பவம் அப்பகு தியில் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.