உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம்- 5-ந் தேதி நடக்கிறது

Published On 2022-06-26 08:55 GMT   |   Update On 2022-06-26 08:55 GMT
  • திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடத்தப்பட உள்ளது.
  • திருநங்கைகள் அனைவரும் தவறாது கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு மாநில அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் சென்றடையும் நோக்கில் திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் வருகிற 5-ந் தேதி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட உள்ளது.

எனவே நெல்லை மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகள் அனைவரும் காலை 11 மணிக்கு தவறாது கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News