உள்ளூர் செய்திகள்

மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

ஜேடர்பாளையத்தில் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி

Published On 2022-07-01 09:18 GMT   |   Update On 2022-07-01 09:18 GMT
  • ஜேடர்பாளையத்தில் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
  • சேலம், மேட்டூர் அரசு மீன் பண்ணை மேற்பார்வையாளர் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பில் உள்ள சாதகங்கள் குறித்து மீனவர்களுக்கு விளக்கினார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரம், ஜேடர்பாளையத்தில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி வேளாண்மை - உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் நடைபெற்றது. பயிற்சியை நாமக்கல் மாவட்ட உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் நாச்சிமுத்து தொடங்கிவைத்தார்.

கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி முன்னிலை வகித்து வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்.

சேலம், மேட்டூர் அரசு மீன் பண்ணை மேற்பார்வையாளர் ரவி ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பில் உள்ள சாதகங்கள் குறித்து விளக்கினார்.

சிறுநல்லிகோயில் கிராமத்தில் மீன்பண்ணை அமைத்து மீன்சாகுபடி செய்துவரும் முன்னோடி விவசாயி ராஜு மீன்கள் வளர்க்க பண்ணைக்குட்டை அமைப்பது, கட்லா, ரோகு. மிர்கால், சாதா கெண்டை, புல் கெண்டை மற்றும் மரபணு மேம்படுத்தப்பட்ட கிப்ட் திலேப்பியா ஆகிய பல்வேறு ரக மீன்களை ஒருங்கிணைத்த முறையில் வளர்க்கும் தொழில்நுட்பங்கள், தீவன மேலாண்மை, சந்தைப்படுத்துதல், மீன்வளர்ப்பில் விவசாயிகளுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியன குறித்து விழிப்புணர்வு விளக்கவுரை அளித்தார்.

மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் ஹேமலதா, கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி ஆகியோர் பேசினர். பயிற்சியின் முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதர் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நன்றி கூறினார்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதர், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகண்ணன், முன்னோடி விவசாயிகள் மாரியம்மன் படுகை பழனிசாமி, உழவன் விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம், ரமேஷ்குமார் மற்றும் வடகரை ஆத்தூர் கிராம முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News