உள்ளூர் செய்திகள்

கருத்தங்கம் நடைபெற்ற போது எடுத்த படம்.

சங்கரன்கோவிலில் பாரம்பரிய உணவு கருத்தரங்கம்

Published On 2022-07-13 09:15 GMT   |   Update On 2022-07-13 09:15 GMT
  • கருத்தரங்கிற்கு முன்னாள் நகராட்சி உறுப்பினர் அண்ணா வியப்பன் தலைமை தாங்கினார்.
  • இயற்கை வேளாண் ஆய்வாளர் எழுத்தாளர் பாமயன் பங்கேற்று பாரம்பரிய உணவு குறித்துப் பேசினார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் திருக்குறள் தமிழோசை அறக்கட்டளை தொடக்க விழா மற்றும் பாரம்பரிய உணவு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முன்னாள் நகராட்சி் உறுப்பினர் அண்ணா வியப்பன் தலைமை தாங்கினார்.

அறக்கட்டளை நிறுவனர் சதீஷ்கனககுரு முன்னிலை வகித்தார்.இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர்ராம் அறிமுக உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து இயற்கை வேளாண் ஆய்வாளர் எழுத்தாளர் பாமயன் பங்கேற்று பாரம்பரிய உணவு குறித்துப் பேசினார். சங்கரநாராயணன் வாழ்த்திப் பேசினார். தலைமையாசிரியர் சாந்தி வரவேற்றார். வனமதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை திருக்குறள் தமிழோசை அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News