உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள். 

பென்னாகரம் அருகே குட்கா விற்பனை செய்த வியாபாரி கைது

Published On 2023-11-16 09:56 GMT   |   Update On 2023-11-16 09:56 GMT
  • மோட்டார் சைக்கிள் பறிமுதல் போலீசார் விசாரணை
  • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

பென்னாகரம், 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பளிஞ்சரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் மோகன் (வயது 27).

இவர் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதி மளிகை கடைகளுக்கு மளிகை பொருட்களை 3 சக்கர ஆட்டோ மூலம் விற்பனை செய்து வருகிறார். இவர் சுற்று வட்டாரம் மளிகை கடைகளுக்கும் குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும் விற்பனை செய்வதாக பென்னாகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரகசிய தகவலின் பெயரில் பென்னாகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், கோவிந்தசாமி, கோவிந்தன் உள்ளிட்டோர் ரகசியமாக கண்காணித்தனர்.இதையறிந்த தலைமறைவாக மோகனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து குட்கா விற்பனைக்காக பயன்படுத்தி வந்த 3 சக்கர ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கைதான மோகனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News