உள்ளூர் செய்திகள்

டி.ஆர்.பி.ராஜா நல்ல அமைச்சர் என்று பெயர் எடுக்க வேண்டும் டி.ஆர்.பாலு பேட்டி

Published On 2023-05-11 07:11 GMT   |   Update On 2023-05-11 07:11 GMT
  • முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
  • பூண்டி கலைவாணன் எனது நண்பர்.

சென்னை:

முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது குறித்து டி.ஆர்.பாலு கூறுகையில், "எங்கள் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லெண்ணங்களை, எதிர்பார்ப்புகளை மிக சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற வகையில் நல்ல அமைச்சர் என்ற பெயரை டி.ஆர்.பி.ராஜா எடுக்க வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்" என்றார்.

அவரிடம் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட சிலர் அதிருப்தியில் இருப்பதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டி.ஆர்.பாலு கூறுகையில், "பூண்டி கலைவாணன் எனது நண்பர். எங்கள் மாவட்ட செயலாளர். டி.ஆர்.பி. ராஜா அமைச்சர் ஆவதற்கு அவரும் ஒரு காரணம்" என்றார்.

Tags:    

Similar News