உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

கொடைக்கானல் அன்னைதெரசா பல்கலைக்கழகத்தில் சுற்றுலா, பசுமை முதலீடு கருத்தரங்கு

Published On 2023-09-28 05:09 GMT   |   Update On 2023-09-28 05:09 GMT
  • அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மேலாண்மை துறை சார்பில் சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
  • கொடைக்கானலில் தொழில் முனையும் வாய்ப்புகளை மாணவர் கருத்தில் கொள்ளும்படி கருத்தரங்கில் கூறப்பட்டது.

கொடைக்கானல்:

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மேலாண்மை துறை சார்பில் சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு குறித்த கருத்தரங்கு உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியை பதிவாளர் டாக்டர்ஷீலா தொடங்கி வைத்தார்.

துணைவேந்தர் கலா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கொடை க்கானல் டிராவல் இன் ஹாலிடேஸ் நிர்வாக இயக்குனர் சார்லஸ் கலந்து கொண்டார். அவர் தனது உரையில் சுற்றுலா மற்றும் பசுமை முதலீட்டின் தற்போதைய சூழ்நிலையை விளக்கினார். கொடை க்கானலில் சுற்றுலா துறையில் இளைஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்று விளக்கினார்.

கொடைக்கானலில் தொழில் முனையும் வாய்ப்புகளை மாணவர் கருத்தில் கொள்ளு ம்படி தனது உரையில் கூறினார். டிவி என்டர்டெ ய்னர் சதீஷ் மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடைய ஊக்குவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு மேலாண்மை ஆய்வுத் துறைத் தலைவர் கீதா வரவேற்புரை வழங்கி னார். உதவி பேராசிரியை மல்லிகாநன்றி கூறினார்

Tags:    

Similar News