உள்ளூர் செய்திகள்

சுற்றுலா தினம் கொண்டாட்டப்பட்டது.

சுற்றுலா தினம் கொண்டாட்டம்

Published On 2022-10-03 09:49 GMT   |   Update On 2022-10-03 09:49 GMT
  • உலக பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளரக்கூடிய துறையாக சுற்றுலா துறை விளங்குகிறது.
  • சிறிய நாடான மாலத்தீவு 32 சதவீதம் பொருளாதார வளர்ச்சி சுற்றுலா சார்ந்தே உள்ளது.

கும்பகோணம்:

இந்திய பண்பாடுமற்றும் சுற்றுலா முதுநிலை ஆரா ய்ச்சி துறையின் சார்பில் கும்பகோணம் அரசுஆடவர் கல்லூரியில் உலக சுற்றுலா தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அரசினர் ஆடவர் கல்லூரி முதல்வர் (பொ) மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார்.தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ராமசுப்பிரமணியன், கணிதத்துறை தலைவர் குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அனைவரையும் இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல்துறை தலைவர் முனைவர் தங்கராஜு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சுற்றுலா நிறுவன கிரேட் விங்ஸ் இயக்குனர் ஜாகிர் உசேன், புதுக்கோ ட்டை அரசினர் பெண்கள் கல்லூரியின் சுற்றுலாத்து றை தலைவர் நரசிம்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .

விழாவில் சுற்றுலா நிறுவன கிரேட் விங்ஸ் இயக்குனர் ஜாகிர் உசேன் பேசியதாவது:-

ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலா மறு சிந்தனை என்பதாகும். அதாவது மாற்றி சிந்திக்க வேண்டும் என்பதே.

உலக பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளரக்கூடிய துறை சுற்றுலா விளங்குகிறது.

சுற்றுலாதுறை நிலையான வருமானத்தை தரக்கூடியது, சிறிய நாடான மாலத்தீவு 32 சதவீதம் பொருளாதார வளர்ச்சி சுற்றுலா சார்ந்தே உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முதுநிலை சுற்றுலா ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள், துறை தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் உதவி பேராசிரியர் லதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News