உள்ளூர் செய்திகள்
கடம்பூர் பேரூராட்சியில் 9 வார்டுகளுக்கு நாளை ஓட்டு எண்ணிக்கை
- தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 9 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
- 9 வார்டுகளின் பதிவான வாக்கு எந்திரங்கள் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 9 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
இந்த வார்டுகளிலும் தி.மு.க. சார்பில் 7 வேட்பாளர், காங்கிரஸ், ம.தி.மு.க. சார்பில் தலா ஒரு வேட்பாளளும், பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஒரு வேட்பாளரும், சுயேட்சைகள் 13 பேர் என மொத்தம் 23 பேர் போட்டியிட்டனர்.
9 வார்டுகளில் மொத்த ஓட்டுக்கள் 2,470 பேர் தகுதியான நிலையில் 1,598 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இது 65 சதவிகிதம் ஆகும். 9 வார்டுகளின் பதிவான வாக்கு எந்திரங்கள் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் 9 வார்டுகளில் பதிவான வாக்குகள் நாளை ( 1-ந் தேதி ) காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கபடும்.