உள்ளூர் செய்திகள்

காட்டு யானைகள் சேதப்படுத்திய தக்காளி தோட்டத்தை படத்தில் காணலாம்.

தக்காளி தோட்டத்தை நாசம் செய்த காட்டுயானைகள்

Published On 2022-12-28 15:19 IST   |   Update On 2022-12-28 15:19:00 IST
  • வெப்பாளப்பட்டி கிராமத்தில் உள்ள விளைநிலத்திற்குள் புகுந்து சேதப்படுத்தியுள்ளது.
  • பட்டாசு வெடித்தும், தீ பந்தம் கான்பித்தும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் உள்ளது. இந்த யானைகள் நேற்றிரவு வெப்பாளப்பட்டி கிராமத்தில் உள்ள விளைநிலத்திற்குள் புகுந்து சேதப்படுத்தியுள்ளது.

பின்னர் அந்த யானைகள் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் விமலா சண்முகம் என்பவரின் 10 ஏக்கர் விளைநிலத்திற்குள் யானைகள் புகுந்தது.

அங்குள்ள தக்காளி தோட்டத்தை நாசம் செய்தது. பின்னர் விற்பனைக்காக பாக்சில் பறித்து வைத்திருந்த தக்காளிகளை மிதித்து துவம்சம் செய்தது.

இது குறித்து வனசரக பார்த்தசாரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர் தலைமையில் வனவர் நாராயணன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை பட்டாசு வெடித்தும், தீ பந்தம் கான்பித்தும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Tags:    

Similar News