உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்களை கடத்தி சென்றவர் கைது

Published On 2023-03-07 15:41 IST   |   Update On 2023-03-07 15:41:00 IST
  • போலீசார் டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • லாரி மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெங்களூரில் இருந்து சென்னைக்கு சுமார் 495 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிய வந்தது.

இதனையடுத்து லாரி மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனுடைய மொத்த மதிப்பு ரூ.6 லட்சத்து 57 ஆயிரம் ஆகும்.

புகையிலை பொருட்களை கடத்தி சென்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரகுராம் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News