உள்ளூர் செய்திகள்

வக்கீல்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்

Published On 2023-03-31 14:07 IST   |   Update On 2023-03-31 14:07:00 IST
  • தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த வழக்கறிஞர்களும் பாதுகாப்பற்ற தன்மை இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.
  • சட்டப்பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலால் அவர்களின் குடும்பங்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு தூத்துக்குடி வழக்கறிஞர், அரியலூர் வழக்கறிஞர், தருமபுரி வழக்கறிஞர் ஆகியோர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இப்போது சென்னை பெருங்குடி வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனால் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த வழக்கறிஞர்களும் பாதுகாப்பற்ற தன்மை இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக நடைபெறும் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்கவும், வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு சட்டப்பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News