உள்ளூர் செய்திகள்

 ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க மணிமுத்தாறு அணையில் இருந்து உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும் - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2023-01-03 08:39 GMT   |   Update On 2023-01-03 08:39 GMT
  • வடகிழக்கு பருவ மழை பெய்யும் காலத்தில் மணிமுத்தாறு அணையில் இருந்து விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.
  • மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து, நாங்குநேரி தொகுதி விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

நெல்லை:

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வடகிழக்கு பருவ மழை பெய்யும் காலத்தில் மணிமுத்தாறு அணையில் இருந்து விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தண்ணீர் திறந்துவிடுவது தாமதமாகி வருகிறது. அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததே இதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

தற்போது மணிமுத்தாறு அணை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த நல்ல மழையால் நிரம்பி இருக்கிறது. அதனால், பானாங்குளம், மூலக்கரைப்பட்டி, விஜயநாராயணம் உள்ளிட்ட நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாசன பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில், மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து, நாங்குநேரி தொகுதி விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

Tags:    

Similar News