உள்ளூர் செய்திகள்

நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Published On 2023-03-17 14:55 IST   |   Update On 2023-03-17 14:55:00 IST
  • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
  • பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நெல்லை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புறக் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் நகர் புறக்கோட்டத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மின் நுகர்வோர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கவும், கனிவுடன் நடந்து கொள்ளவும் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். 

Tags:    

Similar News