உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

வேதாரண்யம் கோவிலில் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி வழிபாடு நிறைவு

Published On 2023-01-17 14:31 IST   |   Update On 2023-01-17 14:31:00 IST
  • மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் கொடுத்து அருளாசி வழங்கி பேசினார்.
  • பரிசு பொருள்களை ஆலவாய் அண்ணல் அறக்கட்டளையினர் வழங்கினர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் திருநாவுக்கரசர் வார வழிபாட்டு மன்றத்தால் மார்கழி 30 நாட்கள் நடந்த திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி வழிபாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும் முன்னாள் லயன்ஸ் கிளப் தலைவர் வைரம் ஜெயசந்திரன் தலைமையில் நடந்தது.

நாள்தோறும் தனுர்மாத வழிபாட்டில் பங்கேற்ற 100- க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக ஓதுவாமூர்த்திகள் திருவாரூர் சந்திரசேகர், கொடுமுடி வசந்தகுமார் தேசிகர் ஆகியோர் பரிசுகள் கொடுத்து அருளாசி வழங்கி பேசினர்.

விழா மற்றும் வழிபாட்டில் வேதாரண்யம் மன்ற பொருப்பாளர்கள் சச்சிதானந்த தேசிகர், ஓதுவார் பரஞ்சோதி, ஓய்வு பெற்ற தொலைபேசித் துறை ராஜேந்திரன், போலீஸ் எஸ்ஐ வேதமூர்த்தி, சேகர், சத்யசாய் சேவா சமிதி சந்திரமௌலி உட்பட பிரமுகர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.

பரிசு பொருள்களை ஆலவாய் அண்ணல் அறக்கட்டளையினர் வழங்கினர்.

Tags:    

Similar News