உள்ளூர் செய்திகள்

கட்டிடத்தில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு

Published On 2022-12-09 15:23 IST   |   Update On 2022-12-09 15:23:00 IST
  • கால் தவறி கீழே விழுந்தார்
  • போலீசார் விசாரணை

வெம்பாக்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் தூசி அடுத்த மாமண்டூர், தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் மணிகண்டன் (வயது 35). கட்டிட தொழிலாளி.

திருமண மாகவில்லை இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று மாலை வேலை செய்து கொண்டு இருந்தபோது திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மணிகண்டன் தந்தை தூசி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News