உள்ளூர் செய்திகள்

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-01-16 15:28 IST   |   Update On 2023-01-16 15:28:00 IST
  • உடல்நிலை சரியில்லாததால் விபரீதம்
  • போலீசார் விசாரணை

செய்யாறு:

செய்யாறு அடுத்த கருவேல்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55).மண்பாண்ட தொழிலாளி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலி இருந்துள்ளது.

இதற்காக பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார் இருப்பினும் வயிற்று வலி சரியாக இல்லை. இதனால் விரட்டியில் இருந்த ராமலிங்கம் கடந்த பத்தாம் தேதி விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். இதனைக் கண்ட அவரது மகன் அண்ணாமலை தந்தை மீட்டு சிகிச்சையாக செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் சிகிச்சை பெற்று வந்த ராமலிங்கம் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுக்கு இதுகுறித்து அணுகாவூர் போலீஸ் சர்வீஸ் சென்டர் கன்னியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News