உள்ளூர் செய்திகள்

தூக்கிட்டு பெண் சாவு

Published On 2023-03-03 15:08 IST   |   Update On 2023-03-03 15:08:00 IST
  • குடும்ப தகராறில் மன உளைச்சலில் இருந்தார்
  • போலீசார் விசாரணை

தூசி:

வெம்பாக்கம் தாலுகா மாங்கால் கூட்ரோடு வாசவி நகரை சேர்ந்தவர் தியாகராஜன். அவரது மனைவி கிருபா என்கிற ரம்யா (வயது 29).

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ரம்யா கணவரிடம் இருந்து பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று ரம்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தூசி போலீஸ் இணையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News