உள்ளூர் செய்திகள்

வியாபாரிகள் கலந்துரையாடல் கூட்டம்

Published On 2022-09-17 09:23 GMT   |   Update On 2022-09-17 09:23 GMT
  • போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு
  • போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா தலைமையில் நேற்று போதைதடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

இதில் கண்ணமங்கலம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கோவர்த்தனன் உள்பட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, வியாபாரிகள் யாரும் தங்கள் கடைகளில் குட்கா, புகையிலை மற்றும் சிகரெட் உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்வது கூடாது. மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

முடிவில் தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News