உள்ளூர் செய்திகள்

ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

Published On 2022-12-04 14:50 IST   |   Update On 2022-12-04 14:50:00 IST
  • குடிபோதையில் விபரீதம்
  • போலீசார் விசாரணை

ஆரணி:

ஆரணி பாரதியார் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 45).இவர், அந்த பகுதியில் நின்றிருந்தபோது, குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் அங்கு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் அவரை தாக்கி கீழே தள்ளி உள்ளார். இதில் காயம் அடைந்த அருள்தாஸ் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி நகர போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை கைது செய்தார்.

Tags:    

Similar News