உள்ளூர் செய்திகள்

சுங்கச்சாவடியில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்.

சுங்கச்சாவடியை அகற்றும் போராட்டம்

Published On 2023-03-09 09:51 GMT   |   Update On 2023-03-09 09:51 GMT
  • இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரின் அறிவிப்பால் பரபரப்பு
  • ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகில் இனம்காரியந்தல் பகுதியில் சுங்கச்சாவடி கட்டப்பட்டு வாகனங்களுக்கு வசூல் செய்யப்பட்டு வருகின்றது.

இதற்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனை மீறி சுங்கச்சாவடியில் தற்போது வசூல் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை நகரப் பகுதி ஒட்டியும் மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடியை அகற்ற வேண்டும் என தொடர்ந்து பொதுமக்களிடையே எதிர்ப்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இனம்காரியந்தல் பகுதியில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து சுங்கச்சாவடி அருகே 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News