உள்ளூர் செய்திகள்
- வேலை கிடைக்காததால் விரக்தி
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த வேலியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா (வயது 20) ஐடிஐ முடித்துள்ளார்.
இவர் பல நிறுவனங்களில் வேலைக்காக சுற்றியுள்ளார். வேலை கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் வீட்டின் பின்புறம் தூக்கு போட்டுக் கொண்டார்.
இதனைக் கண்டு அவரது தந்தை மூர்த்தி ஆதித்யாவை மீட்டு செய்யாறு அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஆதித்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மூர்த்தி செய்யாறு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.