உள்ளூர் செய்திகள்

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர் பேரவையை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் மாணவர் பேரவை

Published On 2022-12-02 15:27 IST   |   Update On 2022-12-02 15:27:00 IST
  • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • வாழ்க்கையில் முன்னேற குறிக்கோளுடன் படித்து பட்டம் பெற வேண்டும் என அறிவுறுத்தல்

செய்யாறு:

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமையில் வகித்தார். வேதியல் துறை தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒ.ஜோதி எம்எல்ஏ மாணவர் பேரவையை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசுகையில்:-

மாணவர்கள் அனைவரும் தங்களது பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப படித்து பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக வர வேண்டும். இப்பருவம் தவறான பாதையில் செல்லக்கூடிய பருவம் என்பதால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். என்ற குறிக்கோளோடு படித்து பட்டம் பெற வேண்டும். முனைவர் பட்டம் பெரும் வகையில் பல்வேறு துறைகள் செயல்பட்டு வரும் இக்கல்லூரிக்கு பெருமை காத்து கல்லூரி படிப்பை நல்ல முறையில் முடித்து பட்டம் பெற்று அனைவரும் பயன்பெற வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக கல்லூரியின் பிரதான நுழைவு வாயிலை ஒ.ஜோதி எம்எல்ஏ மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தமிழ் துறை தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News