உள்ளூர் செய்திகள்

வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-22 08:27 GMT   |   Update On 2023-03-22 08:27 GMT
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஆரணி:

ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள மேற்கு ஆரணி, ஆரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது.

இதில் வட்ட கிளைத் தலைவர் இல பாஸ்கரன் கிளை செயலாளர் பரசுராமன் ஊரக வளர்ச்சி சங்கம் வட்டார தலைவர் மணிமேகலை மற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

இறுதியில் வட்ட கிளை பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News