உள்ளூர் செய்திகள்
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி முகாம்
- திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது
- அதிகாரிகள் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நேற்று நடை பெற்றது.
ஒன்றியக் குழு தலைவர் சி.சுந்தர பாண்டியன் தலைமையில் ஒன்றியக் குழு அலுவலக த்தில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.பி.முருகன் முன்னிலை வகித்தார்.
இந்த பயிற்சி முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஊராட்சி மன்ற வரவு, செலவு கணக்குகள், செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.