search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online training"

    • இணையதள பயிற்சி ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
    • 2 நாட்கள் நடைபெற்ற இணையதள பயிற்சியில் ஒன்றியக்குழு தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சென்னையில் இருந்து ஊரக உள்ளாட்சித்துறை அலுவலகம் மூலமாக காணொலியில் கிராம ஊராட்சி செயல்படுத்தும் பிரிவுகள், வளர்ச்சிகள், இலக்குகள் தொடர்பான இணையதள பயிற்சி ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு 2 நாட்கள் நடைபெற்ற இணையதள பயிற்சியில் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 22 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றியக்குழு தலைவர் பொன் முத்தையா பாண்டியன், துணைத் தலைவர் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலை வர்கள், துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது
    • அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நேற்று நடை பெற்றது.

    ஒன்றியக் குழு தலைவர் சி.சுந்தர பாண்டியன் தலைமையில் ஒன்றியக் குழு அலுவலக த்தில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.பி.முருகன் முன்னிலை வகித்தார்.

    இந்த பயிற்சி முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஊராட்சி மன்ற வரவு, செலவு கணக்குகள், செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×