உள்ளூர் செய்திகள்

மோடி பிறந்தநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

Published On 2022-09-17 14:50 IST   |   Update On 2022-09-17 14:50:00 IST
  • அன்னதானம் வழங்கினர்
  • தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

செங்கம்:

செங்கத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செங்கம் பகுதியில் உள்ள கோவில்களில் அர்ச்சனை மற்றும் அபிஷேகங்கள் செய்து அன்னதானம் வழங்கினர்.

செங்கம் போளூர் சாலையில் உள்ள தேரடி விநாயகர் கோவிலில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. நிர்வாகிகள் நரேந்திர மோடி பெயரில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து அன்னதானம் வழங்கினர்.

இதில் மாநில நிர்வாகி ஜம்புகுமார், பேரூராட்சி கவுன்சிலர் முரளிதரன், ஆதவன், ஓபிசி துணை தலைவர் ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் இளங்கோவன், ஜெயச்சந்திரன், சேகர், பழனிவேல், ரமேஷ் உள்பட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News