உள்ளூர் செய்திகள்
சோமந்தாங்கல் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- ேசவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த 5 புத்தூர் ஊராட்சியை சேர்ந்த சோமந்தாங்கல் கிராமத்தில் கிராம தேவதை காளியம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் ஆரணி சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தரிசனம் செய்தார். இதில் சேலம் தொழிலதிபர் அண்ணாமலை, ஒன்றிய செயலாளர் கொளத்தூர்திருமால், ஒன்றிய துணைச் செயலாளர் சகுந்தலாஏழுமலை, விவசாய பிரிவு செயலாளர் சேகர், மாவட்ட பிரதிநிதி சுந்தரேசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவில் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.