உள்ளூர் செய்திகள்

கடையை உடைத்து திருட்டு

Published On 2022-09-01 14:58 IST   |   Update On 2022-09-01 14:58:00 IST
  • 2 வாலிபர்கள் கைது
  • போலீசார் விசாரணை

தூசி:

செய்யாறு தாலுகா உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் .

இவர் ஆக்கூர் கூட்டு ரோட்டில் பங்க் கடை வைத்துள்ளார் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்தபோது , கடை முன்பு இருந்த இரும்பு வளையத்தை உடைத்து உள்ளே சென்று கடையில் வைத்திருந்த பொருட்கள் திருட்டுப் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தூசி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீதுதூசிபோலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் மகன் கோபால் சாமி ( வயது 19 ), ஏழுமலை மகன் தேவராஜ் ( 19 ) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News