உள்ளூர் செய்திகள்
ஜவ்வாது மலையில் மாணவர்களுக்கு ரெயின் கோர்ட்
- வருகை அதிகரிக்க நடவடிக்கை
- 80 பேர் பயனடைந்தனர்
போளூர்:
ஜவ்வாது மலையில் காட்டுப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மழை காலங்களில் மாணவர்கள் வருகை அதிகரிக்க முதல் முறையாக வெப்ப ஆடை (ரெயின் கோர்ட்) நேற்று வழங்கினர்.
தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படும் இந்த வெப்ப ஆடை ஏற்கனவே மலைவாழ் பகுதியில் வாழும் மாணவர்களுக்கு கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் ஜவ்வாது மலை ஒன்றியத்திற்குட்பட்ட பண்டி ரேவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று 80 மாணவர்களூக்கு வெப்ப ஆடை வழங்கப்பட்டது.