உள்ளூர் செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
- 10ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லை என்று குற்றச்சாட்டு.
- உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் உறுதி.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குப்பட்ட டைமன் நகர் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த 10ஆண்டுகளாக அடிப்படை வசதியான குடிநீர் சாலை வசதி தெரு விளக்கு உள்ளிட்ட எந்த வசதியும் இதுவரையில் செய்து தரவில்லை என்று பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர்.
மேலும் ஆத்திரமடைந்த குடியிருப்பு வாசிகள் திடிரென 50க்கும் மேற்பட்டோர். ஆரணி வேலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி தாலுகா போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.