உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பட்டா கேட்டு பொதுமக்கள் மறியல்

Published On 2022-12-10 14:23 IST   |   Update On 2022-12-10 14:23:00 IST
  • பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு
  • போக்குவரத்து பாதிப்பு

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்குபட்ட சுபான்ராவ்பேட்டை இருளர் காலனி பகுதியில் சுமார் 70 ஆண்டு காலமாக 15 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

பட்டா கேட்டு மாவட்ட நிர்வாகம் வருவாய் துறைகளுக்கு பல முறை மனு அளித்தனர்.

இதுவரை பட்டா வழங்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆரணி செய்யார் சாலை சுபான்ராவ்பேட்டை கூட்ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் சாலைமறியலை கைவிட்டனர்.

இதனால் ஆரணி செய்யார் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்பட்டது.

Tags:    

Similar News