உள்ளூர் செய்திகள்

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணி சாவு

Published On 2023-04-01 08:25 GMT   |   Update On 2023-04-01 08:25 GMT
  • பிரசவ வலி ஏற்பட்டதால் பரிதாபம்
  • போலீசார் விசாரணை

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் குடிமி குடிசை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ், ராணுவ வீரர்.

இவர் காஷ்மீ ரில் ராணுவ பணியில் உள்ளார். இவரது மனைவி ரேகா (வயது 32). இவர்களுக்கு தன ஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

9 மாத கர்ப்பிணியான ரேகாவுக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனடி யாக அவரை காரில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு ரேகாவை பரிசோதனை செய்த டாக் டர், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக 5 புத்தூ ரில் வசிக்கும் ரேகாவின் தாய் ஜோதிக்கு தகவல் கிடைத் தது. அவர் இதுகுறித்து கண் ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தரணி வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News