உள்ளூர் செய்திகள்
மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
- மருத்துவர்கள் ஆலோசனைப்படி உறவினர்கள் சம்மதம் வழங்கினர்
- கண்ணமங்கலத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் புதுப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா, தனது மகள்கள் லத்திகா (13),கோபிகா (10) ஆகியோர் படிப்புக்காக திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட சத்யா சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சத்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.இதனால் அவரது உடல் உறுப்புகளை மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவரது உறவினர்கள் தானமாக வழங்கினர்.
அவரது சத்யாவின் உடல் கண்ணமங்கலம் கொண்டு வந்து நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.