உள்ளூர் செய்திகள்
ரெயிலில் அடிபட்டு மூதாட்டி சாவு
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
Tiruvannamalai News Old woman dies after being hit by a train
ரெயிலில் அடிபட்டு மூதாட்டி சாவு
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
போளூர்:
போளூர் அருகே உள்ள கிராம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 65). இவர் நேற்று மாம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்றார்.
அப்போது ஆரணி- திருவண்ணாமலை சாலையில் குறுக்கே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் பூங்காவனம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூங்காவனம் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.