உள்ளூர் செய்திகள்

லாரி மோதி முதியவர் பலி

Published On 2023-01-09 15:02 IST   |   Update On 2023-01-09 15:02:00 IST
  • சாலையை கடந்த போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

வெம்பாக்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த தூசி நத்த கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 80). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை வந்தவாசி- காஞ்சிபுரம் மெயின் ரோட்டை கடந்து சென்றார்.

அப்போது எதிரே வந்த லாரி இவர் மீது மோதியது இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அங்கு உள்ளவர்கள் முருகேசனை மீட்டு ஆம்புலன்சில் காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் இறந்தார். இதுகுறித்து தூசி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News