உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி மூதாட்டி பலி

Published On 2023-01-24 10:12 GMT   |   Update On 2023-01-24 10:12 GMT
  • நடந்து சென்றபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு, செஞ்சி, சாலையில் கடந்த 17-ந்் தேதி இரவு அந்த வழியாக 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி பலத்த காயமடைந்தார். உடனே அந்த வழியாக சென்றவர்கள். சேத்துப்பட்டடு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சேத்துப்பட்டு போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியை மீட்டு திருவண்ணாமலை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலியானார்.

இது குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும், மூதாட்டி குறித்தும் சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News