உள்ளூர் செய்திகள்

2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும் வரை சிறை

Published On 2022-07-26 09:17 GMT   |   Update On 2022-07-26 09:17 GMT
  • ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை
  • திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கடந்த 2018 ஆம் ஆண்டு அவரது 12 வயது உட்பட்ட மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அச்சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதை அடுத்த அச்சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அங்கு வந்த அவரது தந்தை சிறுமியிடம் மீண்டும் தகாத முறையில் நடக்க முயன்று உள்ளார் அதற்கு அவர் மறுத்ததால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவம் குறித்து அவரது தாயிடம் தெரிவித்துள்ளார். மேலும் 12 வயதுக்குட்பட்ட உறவுக்கார சிறுமி ஒருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளியை கைது செய்தனர்.

மேலும் அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜராகினார்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார் அதில் பெற்ற மகள் மற்றும் உறவுக்கார சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் ரூ.3000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு தரப்பில் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி பரிந்துரை செய்தனர்.

Tags:    

Similar News