உள்ளூர் செய்திகள்
- சிறப்பு யாகபூஜைகள் நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த வெள்ளூர் கிராமத்தில் கமண்டல நதி தென்கரையில் கிராம தேவதை பொன்னியம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது.
இதைமுன்னிட்டு 15-ம்தேதி மாலை முதல் காலயாகபூஜைகளும், 16-ம்தேதி காலை இரண்டாம் கால யாகபூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் அருகே பக்தர்கள் வசதிக்காக முன்னாள் கவுன்சிலர் சசிகுமார் என்பவர் ரூ.3 லட்சம் மதிப்பில் அன்னதான மண்டபம் திறக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 10 மணி அளவில் பொன்னியம்மன் திருவீதி உலாவும் வாணவேடிக்கையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.