உள்ளூர் செய்திகள்
பூ வியாபாரி வீட்டில் நகை கொள்ளை
- பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன், வைத்தியர் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் மனைவி உமா மகேஸ்வரி (வயது 48). இவர் தள்ளு வண்டியில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இவரது மகளை சென்னையில் வேலை செய்யும் இடத்தில் சென்று விட்டு விட்டுநேற்று காலை வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் செயின், 2 தங்க மோதிரம், தங்க கால் காசு மொத்தம் 4½ பவுன் மற்றும், வெள்ளி கால் கொலுசு, வெள்ளி வளையல் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து செய்யாறு போலீஸ் நிலையத்தில் மகேஸ்வரி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.