உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகம் நடந்த காட்சி.
மருத மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது.
- சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீமருத மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது.
இதையொட்டி கோவிலில் யாகசாலை அமைக்கப்பட்டு ஹோமங்கள், பிரவேசபலி, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்ப ணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நாடிசந்தானம், தத்வார்ச்சனை, மகா பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடந்தது.
காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் பூஜை செய்யப்பட்ட கலசத்தை கோவில் கோபுரத்தின் மீது எடுத்துச் சென்று கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.